Connect with us

முக்கிய செய்தி

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு?

Published

on

எதிர்வரும் நாட்களில் உணவுப் பொருட்களின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலை அதிகரிப்பைக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தையில் அரிசி, மரக்கறிகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலை அதிகரிப்பினால் எதிர்வரும் நாட்களில் அரிசி, பிரைட் ரைஸ், கொத்து போன்றவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.