Connect with us

உள்நாட்டு செய்தி

வத்தளை பிரதேசத்தின் சில பகுதிகளில் இன்று 18 மணி நேர நீர் விநியோகத்தடை

Published

on

வத்தளை பிரதேசத்தின் சில பகுதிகளில் இன்று  18 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய  நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை  தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த பகுதிகளில் இன்று   இரவு 10  மணி முதல் நாளை பிற்பகல் 4 மணி வரை நீர் விநியோகத்தடை அமுலில் காணப்படும் என   நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது

இதன்படி, வத்தளை  ஹேகித்த, பள்ளியாவத்தை, வெலியமுன வீதி, பலகல மற்றும் எலகந்த ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு  நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

ஹெக்கித்த வீதியில் உள்ள நீர்க் குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.