Connect with us

உள்நாட்டு செய்தி

மட்டக்களப்பு வாவிக்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Published

on

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பின்பகுதி வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வீதியின் வாவியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிசார் சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் சடலம் அடையாளம் காணப்படவில்லை.

எனவே இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொலிசார் கோரியுள்ளனர்.