Connect with us

உள்நாட்டு செய்தி

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

Published

on

கொத்மலை – வெவன்டன் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெவன்டன் தோட்டத்தில் 2 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில்,   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 60 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை கம்பளை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

குளவிக் கொட்டுக்கு இலக்கான மற்றையவரான 23 வயது இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.