Connect with us

உள்நாட்டு செய்தி

யானை தாக்கியதில் மூவர் பலி

Published

on

அனுராதபுரத்தின் சில பிரதேசங்களில் காட்டு யானை தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு(27) கெப்பத்திகொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் ஆணொருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, அனுராதபுரம் – மொரகொட பகுதியில் நேற்று(27) மாலை காட்டு யானை தாக்கியதில் 58 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, நேற்று முன்தினம்(26) எப்பாவல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.