Connect with us

முக்கிய செய்தி

இலங்கையின் குறைபாடுள்ள திட்டங்கள்: சாடும் சர்வதேச உரிமை குழுக்கள்

Published

on

சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் (HRW) உள்ளிட்ட 9 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கடுமையான முரண்பாடுகள் இருப்பதாகக் கூறுகின்றன.

இது தொடர்பாக, “உண்மை ஆணைக்குழுவிற்கான இலங்கையின் குறைபாடுள்ள திட்டங்கள்” என்ற தலைப்பில் ஒரு கூட்டறிக்கையை அந்த அமைப்புகள் வெளியிட்டுள்ளன

மோதல்கள் தொடர்பான துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் ஏற்கனவே எழுப்பப்பட்ட அதிருப்திகளே, தமது கவலைகளில் எதிரொலிப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேபோன்ற அமைப்புகள் நிறுவப்பட்டதன் நீண்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது என்றும், அவற்றில் ஒன்றுகூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, உண்மை அல்லது இழப்பீடு வழங்கவில்லை என்றும் இந்த அமைக்கள் சுட்டிக்காட்டியுள்ளன அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு, திறம்பட செயல்படுவதற்கு பாதுகாப்பான மற்றும் சாதகமான சூழலை உறுதி செய்வதற்கான, நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, காணாமற்போனோர் அலுவலகம் போன்ற உள்நாட்டு நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் திறம்பட செயற்பட முடியாது.

அத்துடன், குற்றங்கள் தொடர்பான வழக்குகளைத் தடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சர்வதேச அமைப்புகள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கை அரசாங்கம் நிலைமாறுகால நீதியை ஒரு முழுமையான செயல்முறையாக அணுக வேண்டும், அதில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச குற்றங்களை விசாரணை செய்தல் மற்றும் விசாரணை செய்தல் மற்றும் இழப்பீடுகள், நிவர்த்தி மற்றும் மீண்டும் நிகழாத உத்தரவாதங்கள் போன்ற பயனுள்ள தீர்வுகளை வழங்க வேண்டும் என சர்வதேச அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

எனவே, எந்தவொரு வெற்றிகரமான நிலைமாறுகால நீதி செயல்முறைக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பங்குதாரர்களுடன் கலந்தாலோசிப்பது அவசியம். அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி பங்கேற்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான கணிசமான நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் தேவை.

அவை பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் அது நம்பகத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அந்த 9 அமைப்புக்களின் அறிக்கை வலியுறுத்துகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *