Connect with us

முக்கிய செய்தி

வாடகைக்கு எடுத்த வாகனங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த மூவர் கைது

Published

on

வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடம் இருந்து வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்த வாகனம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 36 மற்றும் 46 வயதுடைய 2 ஆண்கள் மற்றும் 36 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் விற்பனை செய்து அடகு வைத்த மேலும் 2 கார்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 2 போலியான சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் போலி துறைமுக ஊழியர் அடையாள அட்டை உட்பட பல போலி ஆவணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இன்று (19) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *