Connect with us

முக்கிய செய்தி

உணவுப்பொருட்களின் –விலைகள் அதிகரிப்பு!

Published

on

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.அதன்படி, கோழி இறைச்சி, மீன் மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.நேற்று (29) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 1,200 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,500 ரூபா முதல் 1,600 ரூபா வரையான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.அத்துடன், சந்தையில் மீனின் விலையும் மீண்டும் அதிகரித்துள்ளது.