Connect with us

முக்கிய செய்தி

மாகாண சபை முன்னாள் உறுப்பினரின் வாகனம் மோதி தந்தை மகன் பலி !

Published

on

கண்டியில் நேற்று (16) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையொருவரும், அவரது மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பயணித்த ஜீப் ரக வாகனத்தில் மோதுண்டு இருவரும் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.பூவெலிக்கடை – சங்கமித்த மாவத்தையைச் சேர்ந்த சந்திரிக சம்பத் ரொட்ரிகோ (41) என்ற தந்தையும், விமந்த ரொட்ரிகோ (10) என்ற அவரது மகனுமே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.தந்தை மற்றும் மகன் இருவரும் வீதியைக் கடக்கும்போது இவ்விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.விபத்து தொடர்பில் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (17) கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *