Connect with us

உள்நாட்டு செய்தி

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் விபத்து, ஒருவர் உயிரிழப்பு

Published

on

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில்  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீீீதி முரசுமோட்டை பகுதியில் இரவு 11 45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தர்மபுரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரம் நிதுசன் என்ற 20 வயதுைடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதி அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.