Connect with us

உள்நாட்டு செய்தி

நேற்று ஒரே நாளில் அதிகரித்த கொவிட் மரணங்கள்

Published

on

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றிரவு (11) 8 உயிரிழப்புக்கள் பதிவாகிய நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விபரங்கள்

• வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 வயதான ஆண்
• ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண்
• மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஆண்
• கொழும்பு 12 இல் வசித்த 36 வயதான பெண்
• கொழும்பு 14 இல் வசித்த 21 வயதான ஆண்
• பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண்.
• தெற்கு களுத்துறை பகுதியில் வசித்த 67 வயதான ஆண்
• காத்தான்குடி பகுதியில் வசித்த 57 வயதான ஆண்

இது ஒரே நாளில் பதிவான அதிகபடியான உயிரிழப்புகள் என்பது குறிப்பிடதக்கது.

-அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது-