Connect with us

Uncategorized

தீயுடன் விளையாட வேண்டாம் – மைத்திரி

Published

on

மாகாண சபைகளை இரத்து செய்வவது தீயுடன் விளையாடுவற்கு ஒப்பானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

“தி ஹிந்து” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

மேலும் 2020 பொதுத்தேர்தலின் போது தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

COVID தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

COVID தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ள நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் தாமும் அந்த நிலைப்பாட்டிற்கு இணங்குவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்வது இலகுவான விடயம் அல்லவெனவும், 13 ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரிசல் ஏற்படக்கூடும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் எதிர்பார்க்கும் அளவு வேட்பாளர்களை தமது கட்சிக்கு ஒதுக்குவதற்கு ஆளுங்கட்சி தவறினால், தனித்துப் பயணிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.