Connect with us

உள்நாட்டு செய்தி

1 மணி நேரம் 20 நிமிட மின்சார துண்டிப்பு

Published

on

மின்வெட்டை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்குமாறு மின்சார சபை விடுத்த கோரிக்கையை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

மின்வெட்டை நீடிப்பதற்கான சாதகமான காரணங்களை சமர்ப்பிக்காமையே உரிய கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு காரணம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது உள்ளவாறு 1 மணி நேரம் 20 நிமிட மின்சாரம் துண்டிப்புக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.