Connect with us

உள்நாட்டு செய்தி

நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை

Published

on

நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

“போராட்டக்காரர்கள் பாசிசத்தை நாடுவதாக குற்றங்சாட்டியுள்ள அவர், இந்த முயற்சிகளைத் தடுக்கவும், நாட்டில் இயல்புநிலையை மீட்டெடுக்கவும் அவசரகால விதி மற்றும் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் கூறினார்.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் குழுவொன்று இன்று (13) பிரதமர் அலுவலகம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளின் வீடுகளை முற்றுகையிட சதி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்” பிரதமர் தெரிவித்துள்ளார்.