Connect with us

உள்நாட்டு செய்தி

ஜப்பானிய தூதரகம் அவசர கடிதம்

Published

on

இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை துஷ்பிரயோகம் செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளதால், ஜப்பானால் இலங்கைக்கு தற்போது உதவ முடியாது என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கூறியதாக பரவிவரும் செய்திகள் தொடர்பில் கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதன்படி குறித்த கருத்துகளை முற்றாக மறுப்பதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம், பிரதமரின் செயலாளருக்கு எழுத்து மூலம் இன்று (01) இதனை அறிவித்துள்ளது.