உள்நாட்டு செய்தி
பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ள போதிலும், போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு தாமதம்
ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) மாலை கைவிடப்பட்டது.
கடமைகளுக்கு செல்வோருக்கு எரிபொருள் விநியோகிக்குமாறு ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, ரயில்வே திணைக்களம் எரிபொருளை விநியோகித்ததாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இன்று மாலை 3 மணியளவில் ஊழியர்களுக்கான எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ரயில்வே ஊழியர்களின் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று பகல் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ள போதிலும், போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.