உள்நாட்டு செய்தி
எந்த உறுப்பினரும் பணத்திற்கு விலை போக மாட்டார்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் எந்த உறுப்பினரும் பணத்திற்கு விலை போக மாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் அரசியல் ஆதாயத்துக்காக அரசியல் ஏலத்திற்கு பதிலாக கொள்கை ரீதியான அரசியலையே கடைப்பிடித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.