Connect with us

உள்நாட்டு செய்தி

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று

Published

on

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று (25) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

19 ஆவது அரசியல் அமைப்பின் சீர்திருத்தம் மற்றும் தற்போதைய தேவைக்கேற்றவாறான மறுசீரமைக்கப்பட்ட யோசனைகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவினால் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன்மூலம் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை குறைப்பது குறித்துக் கவனம் செலுத்தப்படவுள்ளது.

புதிய அமைச்சரவை கடந்த 18 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும், இதுவரையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை.