Connect with us

உலகம்

அபுதாபியில் டிரோன் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு

Published

on

அபுதாபி விமான நிலையத்திற்கு அருகே ஆளில்லா டிரோன் கருவி மூலம் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் அங்குள்ள எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 எரிபொருள் தாங்கிகள் தீப்பற்றி எரிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது 2 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதலில் மேலும் 6 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.