Connect with us

உள்நாட்டு செய்தி

தெற்கு அதிவேக வீதியில் விபத்து: இருவர் பலி

Published

on

தெற்கு அதிவேக வீதியில் இடபெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கி இன்று அதிகாலை பயணித்த கனரக வாகனமொன்று பௌசர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹல் தல்துவ தெரிவித்துள்ளார்

சம்பவத்தில் கனரக வாகனத்தில் பயணித்த கடவத்தை பகுதியிசச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் பௌசர் சாரதி சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அத்துடன் விபத்தில் காயமடைந்துள்ள மற்றுமொரு நபர் ஒருவர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்

இதேவேளை கனரக வாகனத்தை செலுத்திய சாரதியின் கவனயீனம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.