Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று நீர் விநியோகம் தடைப்படும்

Published

on

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (18) இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கு இரவு 11 மணி முதல் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.