Connect with us

உள்நாட்டு செய்தி

நாளை முதல் 1 மணித்தியால மின் வெட்டு?

Published

on

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் குறுகியகால மின் தடைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9.30 வரையான மணித்தியாலங்களுக்குள் ஒரு மணித்தியால மின் வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் முழுமையாக இயங்கி 900 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் வரை இந்த நிலை காணப்படும் என இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.