Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை – இந்திய நிதியமைச்சர்களுக்கு இடையே முக்கிய சந்திப்பு

Published

on

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை புதுதில்லியில் சந்தித்துள்ளார்.

இதன்போது இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

மேலும் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மூலம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு இலங்கை நிதியமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு நாட்டு நிதியமைச்சர்களும் கலந்துரையாடியுள்ளனர்.