Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களும் அடையாளம்

Published

on

மன்னார் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 358 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இம் மாதம் 2 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (17) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இந்த வருடம் மொத்தமாக 33 டெங்கு நோயளர்களும்,நவம்பர் மாதத்தில் 6 டெங்கு தொற்றாளர்களும் மன்னார் நகர பகுதிக்குள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டமையால் அதிக அளவான வீடுகளைச் சுற்றி மழை  நீர் தேங்கி காணப்படுகின்றமையினால் நுளம்பின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. 

ஆகவே மக்கள் நுளம்பு பெருக்கம் உள்ள இடங்களை அடையாளம் கண்டு அழிப்பதோடு, நுளம்பு கடிக்கும் நேரங்களில் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் சுய சிகிச்சை பெற்றுக் கொள்வதை தவிர்த்து உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சென்று தம்மை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்