உள்நாட்டு செய்தி
யாழ்.மாநகர சபை ஆணையாளருக்கு கொவிட்

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
மாநகர சபை ஆணையாளருக்கு கொவிட்-19 நோய் அறிகுறிகள் காணப்பட்டதால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருடன் பணியாற்றும் 15 உத்தியோகத்தர்களிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் PCR பரிசோதனையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டனர்.