Connect with us

உள்நாட்டு செய்தி

ஏகாதிபத்திய ஆட்சி உருவாக இடமளிக்க போவதில்லை – சஜித்

Published

on

நாட்டை மீட்டு மக்கள் ஆட்சி ஒன்றை உருவாக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (16) அரசாங்கத்திற்கு எதிரான பேரணி நடைப்பெற்றது.

விஹாரமா தேவி பூங்காவில் ஆரம்பித்த பேரணி காலி முகத்திடலில் நிறைவடைந்தது.

இதன் போது உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மேற்படி விடயத்தை கூறினார்.

“கஸ்டப்படும் மக்களை மீண்டும் கஸ்டத்துக்குள் தள்ள வேண்டாம். ஏகாதிபத்திய ஆட்சி உருவாகுவதற்கு இடமளிக்க போவதில்லை. நாட்டை பள்ளத்தில் இருந்து மீட்டு மக்கள் ஆட்சி ஒன்றை உருவாக்குவோம்.” என்றார்.

உர தட்டுப்பாடு, விவசாயிகளின் பிரச்சினை, சீமெந்து, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் ஆகியவற்றை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.