Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 25 கொரோனா தொற்றாளர்கள்

Published

on

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15) மேலும் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 15 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் 2704 தொற்றாளர்களும்,தற்போது வரை 2721 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.-மாவட்டத்தில் தற்போது வரை 25 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தலைமன்னார் பகுதி தபாலகத்தில் கடமை புரியும்   ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் தபாலகம் மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.