Connect with us

உள்நாட்டு செய்தி

சீரற்ற வானிலை 5 உயிர்களை பறித்தது

Published

on

சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.