Connect with us

உள்நாட்டு செய்தி

சீரற்ற வானிலை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்வு

Published

on

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் முதல் கடும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலை நிலவி வருகின்றது.

இவ்வாறு ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தினால் நுவரெலிய மாவட்டத்திலேயே மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.