Connect with us

உள்நாட்டு செய்தி

அதிபர் – அசிரியர் தொழிற்சங்கங்களுக்கு பிரதமர் கூறியது

Published

on

இரண்டு கட்டங்களின் கீழ் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் – ஆசிரியர் கடந்த 93 நாட்களாக தமது சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரி போராடி வரும் நிலையில் இன்று பிரதமருடனான சந்திப்பு இடம்பெற்றது.

முதல் கட்டமாக 2022 வரவு செலவு திட்டத்தின் மூலமும் இரண்டாம் கட்டமாக 2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாகவும் தீர்வு வழங்குவதாக பிரதமர் தெளிவுப்படுத்தியுள்ளார்.