Connect with us

உள்நாட்டு செய்தி

எரிவாயு சிலிண்டரின் விலை உயருமா?

Published

on

லிட்ரோ கேஸ் நிறுவனம் கேஸ் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று (10) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, லாப்ஸ் எரிவாயு நிறுவனமும் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிப்புது குறித்து இன்று தீர்மானிக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் புதிய விலையில் எரிவாயு சிலிண்டரின் விலையை விற்பனை செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கோதுமை மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் நாளை (11) தீர்மானிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஹட்டன் உள்ளிட்ட மலையக பகுதிகளில் சமயல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேஸ் சிலிண்டர்களை கொள்வனவு செய்ய நேற்று முதல் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டி வருவதாக எமது செய்தியாளர் கூறினார்.

இதனால் சில கேஸ் விற்பனை நிலையங்கள் முடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.