Connect with us

உள்நாட்டு செய்தி

இராகலை ஐவரின் சடலங்களும் அடக்கம் – உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை

Published

on

இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் இறுதி கிரியைகள் இன்று (09) நேற்று இரவு இடம்பெற்றன.

தோட்ட மக்கள் கண்ணீர் மழ்க இறுதி கிரியைகளில் பங்கேற்று சடலங்களை தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

தோட்ட மைதானத்தில் சடலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன.

தோட்டங்களில் உள்ள வீடுகளில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது