Connect with us

உள்நாட்டு செய்தி

மாகாண பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை ஆரம்பம்

Published

on

நாட்டில் 200 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட மாகாண பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி  திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், மாகாண ஆளுநர்களினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.