Connect with us

உள்நாட்டு செய்தி

கேர்கஸ்வோல் பகுதியில் தடைப்பட்டிருந்த போக்குவரத்துக்கு வழமைக்கு திரும்பியது.

Published

on

மத்திய மலை நாட்டில் நேற்று (24) மாலை முதல் மழையுடன் கடும் காற்று வீசி வருவதாக எமது செய்தியாளர்கள் கூறினர்.

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் கேர்கஸ்வோல் பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் தடைப்பட்டிருந்த போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

நேற்று இரவு 7 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.

இவ்வாறு வீதியில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணிகளில் தோட்ட மக்களும் வீதி அபிவிருத்தி அதிகாரிகளும் முன்னெடுத்திருந்தனர்.

இதற்கமைய வீதியில் இருந்து மரம் அகற்றப்பட்டதை அடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *