Connect with us

உள்நாட்டு செய்தி

புலமை பரிசில், A/L பரீட்சைக்கான விண்ணப்பக் கால எல்லை நீடிப்பு

Published

on

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை விண்ணபங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித கூறினார்.