Connect with us

உள்நாட்டு செய்தி

‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை’ தொடர்ந்தும் நீடிப்பதா? இன்று முடிவு

Published

on

தற்போது அமுலில் உள்ள ‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை’ தொடர்ந்தும் நீடிப்பது குறித்து இன்று (27) தீர்மானிக்கப்படவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது இதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.

‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்’ கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இது இம்மாதம் 30 ஆம் திகதி அதிகாலை 4மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.