Connect with us

உள்நாட்டு செய்தி

வெறிச்சோடியது நாடு

Published

on

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைதியான நிலை தற்பொழுது காணப்படுகிறது.

போக்குவரத்து மிக குறைவாக காணப்படுவதுடன், அத்தியாவசிய தேவைகள் மாத்திரம் இடம்பெறுகிறது.

வீதி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையற்ற நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஏ 9 வீதியுடன் இணையும் வீதிகள் அனைத்திலும் படையினர் நிறுத்தப்பட்டு நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

மருந்தகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை.

இதேவேளை, நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்தது.

நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

மலையக நகர் பகுதி இவ்வாறு முடக்கப்பட்டிருந்தாலும் தோட்டப்பகுதிகளில் இயல்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.