Connect with us

உள்நாட்டு செய்தி

தாதியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

Published

on

இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 600 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து சுகாதார பணியாளர்களையும் கட்டாயமாக சேவைக்கு சமூகமளிக்குமாறு அரசு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிராக இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றறிக்கையை இரத்து செய்ய வேண்டும் எனவும் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.