Connect with us

உள்நாட்டு செய்தி

ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் பத்து நாட்களுக்குள் பூர்த்தியாகும்

Published

on

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டததை பத்து நாட்களுக்குள் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நான்கு வாரங்களின் பின்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது தடுப்பூசி மருந்தை வழங்கக்கூடியதாக இருக்கும் .

எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை மற்றும் புலமைப்பரில் பரீட்சை முதலானவற்றை நடத்துவதா இல்லையா அல்லது மீண்டும் ஒத்திவைப்பதா என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும்” என்றும் அமைச்சர் கூறினார்.