Connect with us

உள்நாட்டு செய்தி

சீரற்ற வானிலை-5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published

on

சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம்  அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில்  களனி கங்கை  நில்வளா கங்கை, ,கிங்கங்கை, களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக குறித்த   பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எசசரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள 10 பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதல் கட்ட அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.