Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதி வழங்கிய உறுதி

Published

on

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டின் சனத் தொகையில் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவது குறித்த முன்மொழிவு செயற்றிட்டம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொவிட் ஒழிப்பு செயலணி நேற்று (09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போதே இந்த முன்மொழிவு திட்டம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை இரண்டு மில்லியன் சைனோபாம் தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.