Connect with us

உள்நாட்டு செய்தி

பயணக் கட்டுப்பாடு நீக்கம்

Published

on

நாடு முழுவதும் அமுல் நடத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை அமுலிலிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் இவ்வாறு இன்று தளர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கொரோனா தடுப்பு செயலணியின் விசேட சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.