Connect with us

உள்நாட்டு செய்தி

பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீடிப்பதா?

Published

on

ஜூன் 14 வரையான கொவிட் தரவுகளை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் காலத்தில் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீடிப்பதா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

கம்பஹா வைத்தியசாலையில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த வாரத்தை விட இவ்வாரம் தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் மரணங்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.