Connect with us

உள்நாட்டு செய்தி

கிளிநொச்சி நகரில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்

Published

on

கிளிநொச்சி நகரில் படிப்படியாக மக்கள் நடமாட்டம்  அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் நடமாடும் பிரிவு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

நேற்று முதல் மக்கள் நடமாட்டம் படிப்படியாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலயைில் குறித்த மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிசாரும் படையினரும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏ9 வீதியுடன் இணையும் அனைத்து இணைப்பு வீதிகளிலும் படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இரணைமடு சந்தி, கரடிபோக்கு சந்தி, பரந்தன் உள்ளிட்ட பகுதிகளில் வீதி அடைகள் அமைக்கப்பட்டு மக்களின் தேவையற்ற நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதுடன், சோதனைகளும் இடம்பெற்ற வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *