Connect with us

Sports

ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஜப்பானிய மக்களில் நூற்றுக்கு 80 வீதமானோர் எதிர்ப்பு

Published

on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஜப்பானிய மக்களில் நூற்றுக்கு 80 வீதமான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானில் கொவிட் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒத்தி வைக்கப்படாது என போட்டி ஏற்பாட்டு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி டோக்கியோவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடதக்கது.