Connect with us

Politics

இருபதை ஆதரித்த இருவர் ஆளும் கட்சி வரிசையில்

Published

on

இருபதாம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் 9 பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவருக்கு ஆளும் கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர அ.அரவிந்தகுமார் மற்றும் தேசியப் பட்டியல் உறுப்பினர் டயனா கமகே ஆகியோருக்கே ஆளும் கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கு அமையவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இருபதாம் திருத்தத்தை ஆதரித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய 6 உறுப்பினர்களுக்கு எதிர்க் கட்சி வரிசையிலே; ஆசன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.