Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 43 கொரோனா உயிரிழப்புகள்

Published

on

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று இதனை அறிக்கை ஒன்றினுடாக இதனை உறுதிப்படுத்தினார்.

அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,484 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 23 பெண்கள் எனவும் மிகுதி 20 பேரும் ஆண்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

24 வயதுக்கும் 95 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.