Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் ஒழிப்பு விடயத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட தயார் – TNA

Published

on

கொவிட் ஒழிப்பு விடயத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தி முகாமைத்துவம் செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் தோல்வியடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தேவைக் கருதியே அரசாங்கம் பயணத்தடையை அமுல்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொவிட் தடுப்பூசி செலுத்தும் விடயத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்படுகின்றது எனவும் சுமந்திரன் கூறினார்.