Connect with us

உள்நாட்டு செய்தி

கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள வீதியில் பாரிய குழி

Published

on

கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள வீதியில் பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளது.

கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் இந்த குழி ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று (26) காலை 5 மணியளவில் அங்கு இவ்வாறு நிலம் தாழிறங்கியுள்ளது.

எவ்வாறாயினும் கொத்மலை நீர் தேக்க அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தாழிறங்கிய பகுதியை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

புனரமைக்கப்படும் வரை நீர்தேக்கத்தின் மேல் அமைந்துள்ள வீதியில் வாகன போக்குவரத்திற்கு அனுமதியில்லை என அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.