Connect with us

உள்நாட்டு செய்தி

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து யுவதி ஒருவரின் சடலம்

Published

on

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து அடையாளம் காணப்படாத யுவதி ஒருவரின் சடலம் இன்று (25) காலை 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

30 தொடக்கம் 35 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்று (25) நுவரெலியா பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என விசாரணைகளை முன்னெடுக்கும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.